LNG: இந்திய நிறுவனத்தின் ஆய்வில் சந்தேகம்

LNG கட்டமைப்பு தொடர்பான இந்திய நிறுவனத்தின் ஆய்வில் சந்தேகம்

by Staff Writer 05-03-2021 | 8:25 PM
Colombo (News 1st) மேற்கு முனையம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வரும் பின்புலத்தில், இலங்கையில் LNG எனப்படும் இயற்கை திரவ வாயு கட்டமைப்பிற்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்காக இந்திய நிறுவனமொன்று மேற்கொண்ட சாத்திய ஆய்வு தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி ஊடாக இந்த சுற்றாடல் ஆய்வறிக்கையினை மேற்கொள்ளும் பணி PwC India எனும் கணக்காய்வு நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இந்த நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆலோசகர்களுக்கு உரிய தகுதி இல்லை என இன்றைய பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், குறித்த நிறுவனம் LNG அல்லது மிதக்கும் களஞ்சியசாலை தயாரிக்கும் ஆலோசனை செயற்பாடுகளில் ஈடுபட்ட நிறுவனமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, PwC India நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முறைகேட்டை கண்டுபிடிக்காத காரணத்தால், இரண்டாண்டுகள் கடக்கும் வரை அந்நாட்டிலுள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் கணக்காய்வில் ஈடுபடுவதை இடைநிறுத்த இந்திய பிணையங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்ததாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன. கணக்காய்வின் போது குறித்த நிறுவனத்தின் கவனயீனத்தால் இந்தியாவில் முக்கிய கூட்டுத்தாபனங்கள் வரலாற்றில் மிக மோசமான நிதி மோசடியை எதிர்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.