இரணைதீவில் இன்றும் போராட்டம்

இரணைதீவில் இன்றும் போராட்டம்

by Staff Writer 05-03-2021 | 12:00 PM
இரணைதீவில் இன்று (05) மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று காலை 10.30 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் பூதவுடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.