இடைநிலைவகுப்பு மாணவர்களை சேர்ப்பது குறித்த தகவல்

2021 ஆம் ஆண்டுக்கான இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் செயற்பாடு நிறைவு

by Staff Writer 04-03-2021 | 5:23 PM
Colombo (News 1st) தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு இணைப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டாம் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான முறைப்பாடுகளையோ அல்லது வௌி நபர்களினூடாக அச்சுறுத்தல் விடுப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்