by Staff Writer 04-03-2021 | 4:21 PM
Colombo (News 1st) மகா சிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிவராத்திரி விரதத்தை இந்து ஆலயங்களில் சிறப்புற நிகழ்த்த ஊக்கப்படுத்துமாறும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மகா சிவராத்திரி விரதத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களூடாக தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.