கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Staff Writer 03-03-2021 | 8:16 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 7 கொரோனா மரணங்கள் நேற்று (02) உறுதிப்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு - 15 (இருவர்), கொழும்பு - 05, பிலியந்தலை, பிலிமதலாவை, கொழும்பு - 02 மற்றும் கலேவெல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 7 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதனிடையே, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுடன் 83,870 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.