ஓமந்தையில் கட்டளையை மீறி பயணித்த கெப் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு ; இருவர் காயம்

ஓமந்தையில் கட்டளையை மீறி பயணித்த கெப் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு ; இருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2021 | 3:12 pm

Colombo (News 1st) வவுனியா – ஓமந்தை பகுதியில் கட்டளையை மீறி பயணித்த கெப் வண்டி மீது இராணுவத்தினர் இன்று (03) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இதன்போது, கெப் வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டார்.

காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறித்த இருவரும் சேமமடு பகுதியை சேர்ந்தவர்களாவர்.

ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கி கெப் வண்டி பயணித்துக்கொண்டிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்