விமானப் படையின் 7,757 பேருக்கு பதவி உயர்வு

விமானப் படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தி; 7,757 பேருக்கு பதவி உயர்வு

by Staff Writer 02-03-2021 | 2:50 PM
Colombo (News 1st) இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 7,757 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 467 அதிகாரிகளுக்கும் ஏனைய தரங்களில் உள்ள 7,290 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நாளை (03) முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பு காலி முகத்திடலில் விமான சாகசங்கள் நடத்தப்படவுள்ளன. இந்திய விமானப்படையின் 23 விமானங்களும் இந்த நிகழ்வில் இணைத்துக்கொள்ளப்படுகின்றமை விசேட அம்சமாகும்

ஏனைய செய்திகள்