பல்கலைக்கழக உப வேந்தர்கள் - பிரதமர் இடையில் பேச்சு

பல்கலைக்கழக உப வேந்தர்கள் - பிரதமர் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

by Staff Writer 02-03-2021 | 9:22 AM
Colombo (News 1st) பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (02) நடைபெறவுள்ளது. அலரி மாளிகையில் இன்று மாலை 05 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது அதிகரிக்கப்பட்டாலும், பல்கலைக்கழகங்களுக்கான ஒதுக்கீடுகள் போதாது என அவர் கூறியுள்ளார். இதனால் பல்கலைக்கழகங்களில் காணப்படும் கட்டடங்களும் போதுமானதாக இல்லை என பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை மேலதிகமாக 10,600 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைய, இந்த வருடம் 42,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.