நீதிமன்றத்திற்கு அவதூறு: ஆராயுமாறு வலியுறுத்தல்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்பட்டுள்ளதா என ஆராயுமாறு வலியுறுத்தல்

by Staff Writer 02-03-2021 | 4:51 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்று இன்று பிற்பகல் பிரதம நீதியரசரிடம் கையளிக்கப்பட்டது. அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த இறுதி பரிந்துரையூடாக உயர் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாக புலப்படுவதால், அது தொடர்பில் விசாரணை செய்து, ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளூடாக, நீதிக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.