கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 02-03-2021 | 10:49 AM
Colombo (News 1st) இன்று (02) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 310 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. அவர்களில் 07 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். ஏனைய 303 பேரில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 60 ​பேரும் கம்பஹா மாவட்டத்தில் 40 பேரும் கண்டி மாவட்டத்தில் 11 நபர்களும் அம்பாறை மாவட்டத்தில் 13 பேரும் மன்னார் மாவட்டத்தில் நால்வரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 19 நபர்களும் பதுளை மாவட்டத்தில் ஐவரும் திருகோணமலை மாவட்டத்தில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பேரும் யாழ். மாவட்டத்தில் 24 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டை பகுதியில் 8 பேருக்கும் பம்பலப்பிட்டியில் இருவருக்கும் நாரஹேன்பிட்ட, வௌ்ளவத்தை, தெமட்டகொடை, மருதானை ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பஹா - களனி பிரதேசத்தில் 14 பேருக்கும் நீர்கொழும்பில் நால்வருக்கும் வத்தளை பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மன்னார் - அடம்பன் பகுதியில் நால்வர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். நுவரெலியா பகுதியில் 10 பேரும் பொகவந்தலாவை பகுதியில் இருவரும் ஹட்டன் பகுதியில் இருவரும் லிந்துலை பிரதேசத்தில் ஐவரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். மட்டக்களப்பு பிரதேசத்தில் மூவருக்கும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் ஒருவருக்கும் வாகரை பகுதியில் ஒருவருக்கும் வாழைச்சேனையில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (02) காலை வரையில் நாட்டில் 83,552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 79,422 பேர் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் (01) மேலும் 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. கொழும்பு - 10, கண்டி, கனேமுல்லை, புளத்கொஹுபிட்டிய மற்றும் பூஜாபிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளது.