கொரோனா மரணம்; அடக்கம் செய்வதற்கான இடம் அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கான இடம் அறிவிப்பு 

by Staff Writer 02-03-2021 | 11:06 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவிற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார். இரணைதீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்குரிய ஆரம்பகட்ட செயற்பாடுகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்