யாழ். உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுப்பு

by Staff Writer 01-03-2021 | 8:06 PM
Colombo (News 1st) சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (01)  முன்னெடுக்கப்பட்டது. யாழ். நல்லூர் ஆதீன முன்றலில் இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார மாணவர் ஒன்றியம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. தமது கோரிக்கைக்கு நீதி கிடைக்கும் வரை சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்