கேப்பாபிலவு மாணவர்களுக்காக புதிய நூலகம்

முல்லைத்தீவு - கேப்பாபிலவு மாணவர்களுக்காக புதிய நூலகம்

by Staff Writer 01-03-2021 | 3:22 PM
Colombo (News 1st) விமானப்படையினரின் 70 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, முல்லைத்தீவில் இன்று (01) நூலகம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது. கேப்பாபிலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான நூலகம் மாணவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் S. கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் குரூப் கெப்டன் ஏ.டி.ஆர். லியன ஆராச்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நூலக கட்டடம் திறந்துவைக்கப்பட்டு மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.