கொலையில் முடிந்த தந்தை - மகன் இடையிலான வாய்த்தர்க்கம்

by Staff Writer 01-03-2021 | 2:59 PM
Colombo (News 1st) யாழ். புத்தூர் - சிறுப்பிட்டி, தெற்கு நீர்வேலி பகுதியில் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (01) காலை தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றியதால் மகன், வீட்டிலிருந்த இரும்புக் கம்பியினால் தந்தையை தாக்கி கொலை செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நீண்ட நேர தேடுதலின் பின்னர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய சின்னத்தம்பி சீனிவாசன் என்பவ​ரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.