4/21; அறிக்கை மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு 

by Staff Writer 01-03-2021 | 4:25 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் இன்று (01) கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீரவினால் இன்று முற்பகல் அறிக்கை கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.