by Staff Writer 28-02-2021 | 7:38 PM
Colombo (News 1st) மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்னேவ - நேகம பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான இடமொன்றை சோதனைக்குட்படுத்திய போது, 23 மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
அங்கு இவை தவிர 17 உதிரிப்பாகங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் எஞ்சின் ஒன்று ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று (27) மாத்திரம் 6 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.