நோட்டன்பிரிட்ஜில் குளவிக் கொட்டு தாக்குதல்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 28-02-2021 | 6:34 PM
Colombo (News 1st) நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்பொன் தோட்டத்தில் தொழிலாளர்கள் 06 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று (28) காலை 11 மணியளவில் இவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கானதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 06 பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.