போதைப்பொருட்களுடன் ஐவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு; போதைப்பொருட்களுடன் ஐவர் கைது

by Staff Writer 27-02-2021 | 4:06 PM
Colombo (News 1st) ராகம பகுதியில் 750 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் 1 கிலோ 13 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் தெஹிவளையில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த 46 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜம்பட்டா வீதி மற்றும் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்தவர்களே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.