மேலும் 5 மரணங்கள்; இதுவரை 464 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்; இதுவரை 464 பேர் உயிரிழப்பு

by Staff Writer 26-02-2021 | 10:23 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று உறுதிப்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது. நவதகல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆணொருவரும், நாரஹேன்பிட்டி பகுதியை சேர்ந்த 72 வயதான பெண்ணொருவரும் கண்டியை சேர்ந்த 70 வயதான ஆணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கொழும்பு 9-ஐ சேர்ந்த 71 வயதான ஆணொருவரும் வெயாங்கொட பகுதியை சேர்ந்த 71 வயதான ஆணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே, இன்று மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 82,180 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77,625 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 4,096 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 464 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.