4/21 தாக்குதல்: விசாரணை அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு 

by Staff Writer 25-02-2021 | 12:32 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் சிங்களம் மற்றும் ஆங்கில பிரதிகள் மாத்திரமே சபைக்கு சமர்ப்பிக்கப்படுவதாக இதன்போது அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.