பன்னல வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு 

by Staff Writer 25-02-2021 | 10:44 AM
Colombo (News 1st) பன்னல - கங்கானியம்முல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (24) காரொன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த 17 வயதான சிறுமிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், 47 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் 17 வயதான சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான காரின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுள்ளன.