அபாயமிக்க பகுதிகளில் நாளை முதல் தடுப்பூசி

கொரோனா அபாயமிக்க கிராம சேவகர் பிரிவுகளில் நாளை முதல் தடுப்பூசி

by Staff Writer 25-02-2021 | 8:46 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நிலவும் கிராம சேவையாளர் பிரிவுகளில் நாளை (26) முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் கோரப்பட்டுள்ள 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று (25) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 28 ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து கிடைத்த தடுப்பூசிகளில் 360,000 தடுப்பூசிகள் இதுவரை ஏற்றப்பட்டுள்ளன.