ஆஸியில் கூகுள், பேஸ்புக் தொடர்பான புதிய சட்டம்

அவுஸ்திரேலியாவில் கூகுள், பேஸ்புக் தொடர்பான புதிய சட்டம்

by Staff Writer 25-02-2021 | 10:09 AM
Colombo (News 1st) கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தமது தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் எனும் சட்டத்தை அவுஸ்திரேலிய அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த சட்டம் தொடர்பான விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனம் அவுஸ்திரேலிய பயனாளர்ளுக்கு செய்திகளை பகிர்வதற்கு தடை விதித்தது. எனினும், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த சமூக வலைத்தளங்களுக்கு பொருத்தமில்லாதவை நீக்கப்பட்டு, சில திருத்தங்களுடன் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.