முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் அரச அபிவிருத்தி பணி

முத்துராஜவெல சதுப்பு நிலத்தை அரச அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை

by Bella Dalima 24-02-2021 | 4:49 PM
Colombo (News 1st) முத்துராஜவெல சதுப்பு நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வந்து, அரச அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். முத்துராஜவெல சதுப்பு நிலம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக மஹிந்த அமரவீர கூறினார்.