English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Feb, 2021 | 7:02 pm
Colombo (News 1st) இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நாட்டிற்கு வருகை தந்த, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இன்று கலந்துரையாடியிருந்தார்.
இதேவேளை, 15 முஸ்லிம் பிரதிநிதிகளும் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் 10.30 அளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் கொழும்பில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசனத்திலும் பாகிஸ்தான் பிரதமர் கலந்துகொண்டிருந்தார்.
08 Apr, 2021 | 09:21 AM
03 Apr, 2021 | 04:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]irst.lk
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS