by Staff Writer 23-02-2021 | 10:02 AM
Colombo (News 1st) விவசாய அமைச்சின் செயலாளர் பதவியை தாம் இதுவரை இராஜினாமா செய்யவில்லை என விவசாயம், மகாவலி, கிராமிய அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா தெரிவித்துள்ளார்.
இராஜினாமா தொடர்பில் இதுவரையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், விவசாய அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான எண்ணம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தரவிடம் கடந்த 15 ஆம் திகதி தாம் தௌிவுபடுத்தியதாகவும் சுமேத பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து சுமேத பெரேரா இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகியுள்ள செய்தி தொடர்பில் தௌிவுபடுத்தும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.