பொலிஸாருக்கு புதிதாக 2,000 முச்சக்கரவண்டிகள்

பொலிஸாருக்கு 2,000 முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி 

by Staff Writer 23-02-2021 | 11:58 AM
Colombo (News 1st) இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 2,000 முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்படும் கடமைகளை சீரான முறையில் மேற்கொள்வதற்கு போதுமான வாகனங்கள் இன்மையால் அதற்கு தீர்வாக முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்திருந்தார்.