தமிழ் தேசிய பேரவை: ஆலோசித்த பின்னரே தீர்மானம் 

தமிழ் தேசிய பேரவை உருவாக்கம்; கட்சிக்குள் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானம் - இரா. சம்பந்தன்

by Staff Writer 23-02-2021 | 4:44 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பில் கட்சிக்குள் ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசாவிற்கு தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. தமிழ் தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பில் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானம் எடுக்க முடியும் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாக இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர் பங்குபற்றாத நிலையில், தமிழ் தேசிய பேரவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிடம் கலந்துரையாடியதாக மாவை சேனாதிராசா குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில், மத்திய குழுக் கூட்டத்தில் பேசி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.