ஐ.நா கூட்டத்தொடரில் தினேஷ் குணவர்தன உரையாற்றவுள்ளார்

by Staff Writer 23-02-2021 | 8:06 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவுள்ளார். இலங்கை நேரப்படி இரவு 9 மணிக்கு அவர் இணையம் ஊடாக பேரவையில் உரையாற்றவுள்ளார். இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் ஏற்கனவே அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். இந்த நிலையில், பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன எல்லே குணவங்ஸ தேரரை இன்று முற்பகல் சந்தித்து ஆசிபெற்றார். அதன் பின்னர் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர், மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரை அரசியல் யோசனையே அன்றி மனித உரிமைகள் தொடர்பான யோசனை அல்லவென குறிப்பிட்டார்.