English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Feb, 2021 | 3:58 pm
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பள நிர்ணய சபை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 900 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீரமானம் தொடர்பில் சுமார் 180 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆட்சேபனைகள் தொடர்பில் மார்ச் முதலாம் திகதி கலந்துரையாடவுள்ளதாக தொழில் ஆணையாளர் குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1040 ரூபாவை வழங்க வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் கடந்த 8 ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை சம்பள நிர்ணய சபை கூடிய போதிலும், எவ்வித இணக்கப்பாடும் இன்றி கூட்டம் நிறைவடைந்தது.
பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவர் மாத்திரமே அன்றைய தினம் கலந்து கொண்டிருந்தமையினால் கலந்துரையாடல் பிற்போடப்பட்டது.
02 Mar, 2021 | 02:22 PM
22 Feb, 2021 | 07:41 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS