by Staff Writer 22-02-2021 | 5:57 PM
Colombo (News 1st) மியன்மாரில் இராணுவக் கிளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதன் மூலம், ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்வார்களென இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட போதிலும், அதனை மீறி பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பொது பணிப்புறக்கணிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியன்மார் தலைநகர் நேபிடோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கலைத்துள்ளனர்.
இந்தநிலையில், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் ட்ரக் ஒன்று தயார் நிலையில் இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த முதலாம் திகதி மியன்மார் இராணுவம் மேற்கொண்ட கிளர்ச்சியை தொடர்ந்து, பல வாரங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.