புகையிரத பயணிகளுக்கான விசேட அறிவித்தல் 

புகையிரத பயணிகளுக்கான விசேட அறிவித்தல் 

by Staff Writer 22-02-2021 | 2:12 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க மற்றும் புத்தளத்திற்கு இடையிலான ரயில் சேவை இரு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 28 ஆம் திகதி இரவு 8.30 மணி வரை குறித்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளம் ரயில் மார்க்கத்தின் குரண மற்றும் நீர்கொழும்பிற்கு இடைப்பட்ட பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் புத்தளம் ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து கொழும்பு -  கோட்டை மற்றும் கட்டுநாயக்க வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.