பாகிஸ்தான் பிரதமர் நாளை நாட்டிற்கு 

பாகிஸ்தான் பிரதமர் நாளை நாட்டிற்கு 

by Staff Writer 22-02-2021 | 2:23 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (23) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது வர்த்தகம், சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன் இரு தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் சிலவற்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.