நாட்டில் மேலும் 3 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்

நாட்டில் மேலும் 3 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானம் 

by Staff Writer 22-02-2021 | 2:33 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 03 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கொழும்பு, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.