COVID-19: இன்று 257 பேருக்கு தொற்று உறுதி

COVID-19: இன்று 257 பேருக்கு தொற்று உறுதி

by Staff Writer 20-02-2021 | 6:54 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை 79,194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் , 5,305 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 890 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் 73, 456 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். அத்துடன், COVID-19 தொற்றினால் 433 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.