தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை முன்வைத்தன

by Staff Writer 20-02-2021 | 6:10 PM
Colombo (News 1st) புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழுவிடம் இன்று பல கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றும் கூடியது. இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது யோசனைகளை முன்வைத்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றிருந்தனர் இதேவேளை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தமது நிலைப்பாட்டை இன்று நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலர் இன்று அங்கு சென்றிருந்தனர்.

ஏனைய செய்திகள்