by Staff Writer 18-02-2021 | 5:07 PM
Colombo (News 1st) யால சரணாலயத்தில் இருந்து 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
30 மூட்டைகளில் பொதியிடப்பட்டிருந்த 350 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக ஊவா மாகாண வன ஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்தார்.
விற்பனை செய்ய தயாராகியிருந்த போதே கஞ்சா கைப்பற்றப்பட்டதாக உபுல் இந்திரஜித் குறிப்பிட்டார்.