Colombo (News 1st) நேற்றைய தினம் (17) மேலும் 13 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
இதனடிப்படையில், நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்திலேயே அதிக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.