சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு தடுப்பூசி

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு COVID-19 தடுப்பூசி

by Staff Writer 18-02-2021 | 4:20 PM
Colombo (News 1st) சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள 425 அதிகாரிகளுக்கு COVID-19 தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சட்டமா அதிபர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கமைய, தமது திணைக்கள அதிகாரிகளுக்கு இன்று COVID-19 தடுப்பூசி ஏற்றப்பட்டதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.