கொழும்பின் பல பகுதிகளில் 20 ஆம் திகதி நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 20 ஆம் திகதி நீர்வெட்டு

by Staff Writer 18-02-2021 | 4:45 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (20) காலை 8 மணி தொடக்கம் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை, கொட்டிகாவத்தை, முல்லேரியாவ, இரத்மலானை ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.