by Staff Writer 18-02-2021 | 7:32 AM
Colombo (News 1st) சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50,000 ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
125,000 ஏக்கர் வயல் நிலங்கள் கைவிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எம்.எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாணம் மற்றும் மேலம் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களிலுள்ள கைவிடப்பட்ட வயல்களில் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.