பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளிநாட்டு கடன் சந்தையில் நேரடியாக கடன் பெற தீர்மானம்: அமைச்சரவை அனுமதி

by Staff Writer 16-02-2021 | 2:26 PM
Colombo (News 1st) பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கான கடன் முகாமைத்துவத்திற்காக அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச நிறுவனங்களில் அதிக கடன் சுமையுள்ள நிறுவனமாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் காணப்படுகிறது. பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது 600 பில்லியன் கடனில் உள்ளது. பல நிறுவனங்களுக்கு எரிபொருளை கடனுக்கு வழங்கிமையால், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் சுமை அதிகரித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். பெட்ரோலியத்தை தொடர்ந்தும் நட்டத்திற்கே விற்பனை செய்தமையால், கூட்டுத்தாபனத்தின் நிதி வங்குரோத்து அடைந்துள்ளதாக உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிரதமரால் குழுவொன்று நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டதன் பின்னர், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளிநாட்டு கடன் சந்தையில் நேரடியாக கடனை பெறுவதற்கு தீர்மானித்தது. இந்த தீர்மானத்திற்கு தற்போது அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.