நிதி அகர்வாலின் சிலைக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்

நிதி அகர்வாலுக்கு சிலை வடித்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் 

by Chandrasekaram Chandravadani 16-02-2021 | 12:03 PM
பொலிவூட் நடிகையான நிதி அகர்வாலுக்கு சிலை செய்து பாலாபிஷேகம் செய்துள்ளனர் அவரது ரசிகர்கள். ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட இவர், தமிழில் அண்மையில் வௌியாகிய பூமி மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரு படங்களே வௌியாகியுள்ள நிலையில், நிதி அகர்வாலுக்கு பெரியதொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றதாம். காதலர் தினத்தன்று நிதி அகர்வாலுக்கு சிலை வடித்து, பாலாபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி கொண்டாடியுள்ளார்கள் சென்னை ரசிகர்கள். எதிர்பார்க்காத ஒன்று, காதலர் தினத்தில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இதுவென நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.