2 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம் 

by Staff Writer 16-02-2021 | 8:52 AM
Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 818 வேயங்கல்ல கிழக்கு மற்றும் 818 - A வேயங்கல்ல மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று (15) இரவு முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.