Colombo (News 1st) மியன்மாரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் இராணுவத்தினருக்கு தடைகள் அல்லது இடையூறு விளைவிக்கப்படுமாயின் அவர்களுக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இராணுவத்தினருக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நகரங்களில் இராணுவத்தினரின் வாகன பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
ஆட்சிக்கவிழ்ப்பு, இராணுவ மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.