English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
16 Feb, 2021 | 5:52 pm
Colombo (News 1st) மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமென அந்நாட்டு இராணுவம் உறுதியளித்துள்ளது.
அத்துடன், தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு ஆட்சியதிகாரத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கடந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து இராணுவத்தினால் ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது.
நிர்வாகத்தலைவர் ஆங் சாங் சூ கி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலர் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்குமாறும் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், மியன்மாரில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆங் சாங் சூ கிக்கு எதிராக மியன்மார் பொலிஸினால் இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் வன்முறையை தூண்டியதாக ஆங் சாங் சூ கி மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே, 6 walkie talkie-களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
11 Oct, 2022 | 06:29 PM
01 Jul, 2022 | 07:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS