முதல் நாள் பாடசாலைக்கு சென்ற சிறுவனின் இறுதிப் பயணம்...

by Staff Writer 15-02-2021 | 4:41 PM
Colombo (News 1st) பதுளை நகரில், லொறியொன்றின் டயரில் சிக்கி 06 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவனை முதலாம் வகுப்பிற்கு சேர்ப்பதற்காக அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். தனது பாட்டியுடன் சென்ற, பதுளை அசேலபுர பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த பாட்டி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுவனின் சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், லொறியின் சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பதுளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.