பா.உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி 

by Staff Writer 15-02-2021 | 3:12 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை (16) முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாளை தொடக்கம் 04 நாட்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. நாரஹேன்பிட்டவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் என படைக்கள சேவிதர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் நாளை (16) கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. சிறைச்சாலைகள் பயிற்சிக் கல்லூரியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 5,100 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள சிறைச்சாலைகளில் ஆரம்பிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஏனைய மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.