பாடசாலை நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு ஆலோசனை 

பாடசாலை நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு ஆலோசனை 

by Staff Writer 15-02-2021 | 5:16 PM
Colombo (News 1st) பாடசாலைகளில் நடாத்தப்படும் அனைத்து நிகழ்வுகளையும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளரால் அனைத்து மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வுகள் காணப்படுமாயின் அவற்றையும் இரத்து செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பினால், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்ட வேண்டிய காலப்பகுதி என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.