2020 வாக்காளர் இடாப்பு: ஆட்சேபனை விசாரணை ஆரம்பம்

2020 வாக்காளர் இடாப்பு: ஆட்சேபனை விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 14-02-2021 | 2:42 PM
Colombo (News 1st) 2020 வாக்காளர் இடாப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆட்சேபனை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவட்ட உதவி பதிவாளரின் தலைமையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை ஆட்சேபனைகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இதன்போது 2020 வாக்காளர் இடாப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்ற உரித்து மற்றும் எதிர்ப்பு குறித்து பரிசீலிக்கப்படவுள்ளன.